அனைத்து தமிழ் மற்றும் சிங்கள அரச மற்றும் அரையரச பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைகின்றன.
2022 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் அடுத்தவாரம் முதல் இடம்பெறவுள்ள நிலையில் அதனோடு இணைந்த வகையில் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுகிறது.
இதன்படி மீண்டும் பாடசாலை மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.