பல வாகனங்கள் கறுப்பு பட்டியலில் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

1 year ago
Sri Lanka
aivarree.com

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற வாகன பரிசோதனையை அடுத்து புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட காலத்திற்குகள் கறுப்பு புகை வெளியேற்றத்தை சீர் செய்யாத வாகனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஹோமாகம, கொட்டாவ, பண்டாரகம, அளுத்கம, மத்துகம, பேருவளை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களில் இந்த வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

மேலும் மேல் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தில் 1,127 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் கறுப்பு புகை வெளியேற்றத்தை சீர் செய்யாத வாகனங்கள் போக்குவரத்துக்கு தகுதி அற்றதாக கருதப்பட்டு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.