சீனா தரும் கடனை எவ்வாறு பயன்படுத்துவோம்? | இலங்கை அறிவிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

சீனாவிடம் கோரியுள்ள 2.5 பில்லியன் டொலர் மேலதிக கடன் எவ்வாறு பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 2.5 பில்லியனில் 1.5 பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் எல்லை வசதியில், மூலப்பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

மீதி 1 பில்லியன் டொலர், வெளிநாட்டு நாணய சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்படும்.

திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல இந்த தகவலை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், சீனா இன்னும் இந்த கடனை வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை.