சீனாவிடமிருந்து பெற உத்தேசிக்கப்பட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியானது, சீன வங்கிகளிடமிருந்த முன்னர் பெறப்பட்ட கடனை தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
சீனாவிடமிருந்து இலங்கை ஏற்கனவே பெற்ற கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை பிற்போடும் கொள்கை சீனாவிடம் இல்லை என்பதால் இந்த முறை பின்பற்றப்படவுள்ளது.
புதிய கடன் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக, சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மேலும் US $ 1.5 பில்லியனை இலங்கை கடன் வசதியாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.