குடும்பஸ்தர் கொலை | மனைவி, மாமனாருடன் 11 பேர் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார், (மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தல் நிலையம் (கராஜ்) ஒன்றை நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவர் கடந்த 21ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

கொலையான நபர் குடும்ப முரண்பாடுகள் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வசித்து வந்துள்ளார்.

கொலையானவரின் மனைவியும், மாமனாரும் இணைந்து திட்டம் தீட்டி வேறு நபர்கள் மூலம் அவரை படுகொலை செய்துள்ளனர் என கண்டறிந்த நிலையில் மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.