வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த நான்கு நாட்களில் 1600க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்தன.
இதற்கு காரணம் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் நிலவிய கடும் குளிர்ச்சியே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரணித்த கால்நடைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அந்த பரிசோதனை முடிவு விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட குளிர்ச்சியால் விலங்குகள் அதிர்ச்சிக்குள்ளானமையே இந்த மரணங்களுக்கான காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.