கெப் வாகனத்தை களவாடி நுவரெலியாவிலிருந்து நீர்கொழும்பு வந்த 4 சிறுவர்கள் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

நுவரெலியாவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றைச் சேர்ந்த 4 சிறார்கள், அங்கிருந்த கெப்ரக வாகனம் ஒன்றை செலுத்தி நீர்கொழும்புக்குச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் செலுத்திய கெப் வாகனம் நிட்டம்புவ பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி அங்கிருந்து தப்பிச் சென்ற போது, மோதுண்ட வேன் சாரதி அவர்களை துரத்திப் பிடித்து பொலிசாரிடம் கையளித்துள்ளார். 

நுவரெலியா, தலவாக்கலை, பூண்டுலோயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16, 12 மற்றும் 11 வயதான மூன்று பேரும், அண்மையில் நீர்கொழும்பிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து நுவரெலியாவுக்கு மாற்றப்பட்ட சிறுவன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு கடற்கரையை பார்ப்பதற்காக அவர்கள் கெப் வாகனத்தை களவாடி செலுத்தி வந்திருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.