கல்ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரை ஒன்றில் ஞாயிறு பௌத்த அறநெறிப் பாடசாலைக்குச் சென்ற மாணவி (வயது 15) மீது ஒருவர் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி காதலை மறுத்ததன் விளைவாகவே இந்த கத்திக் குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் விகாரைக்குள் நுழைந்து தரம் 11 மாணவியைத் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவி, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் கல்ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.