கடவுச் சீட்டு பெறவுள்ளோருக்கான மகிழ்ச்சியான செய்தி

1 year ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்இ கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


இதனைக் கருத்திற்கொண்டு கடவுச் சீட்டைப் பெறுவதற்கு இலகுவதாக புதிய 50 கிளை அலுவலகங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அல்லஸ் தெரிவித்துள்ளார்.


தற்போது கொழும்பிலும் வுவுனியாஇ குருணாகலைஇ கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடவுச் சீட்டு அலுவலகங்கள் உள்ளன.


இந்த கிளை அலுவலகங்களை 50ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும்இ அதன் ஊடாக கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் விரைவு படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.