புதிய அமைச்சர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் பதவி ஏற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவைக்கு இன்னும் 10 அமைச்சர்கள் வரையில் நியமிக்கப்படலாம்.
அவர்களது நியமனங்களை உடனடியாக வழங்காமல், காலம் தாழ்த்தி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக அமைச்சுப் பதவி பெறவுள்ளவர்களில் துமிந்த திஸாநாயக்க, ராஜித்த சேனாரத்ன போன்றவர்களும் அடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.