எரிபொருள் விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் அநாமதேயமாக அய்வரிக்கு தெரிவித்தார்.
இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.
இதன்பின்னர் எரிபொருள் விலை குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இதேவேளை பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்தியின் போது குறிப்பிடத்தக்க இலாபம் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவரால் வெளியிடப்பட்ட எரிபொருள் உற்பத்திக்கான கிரயப்பட்டியல்படி, ஒக்டேன் 95 பெற்றோல் தவிர, வேறெதிலும் குறிப்பிடத்தக்க இலாபங்கள் இல்லை என கூறப்படுகிறது.