எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

புத்தாண்டு பண்டிகை காலத்தினை கருத்திற் கொண்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

இதனிடையே பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் போதுமான எரிபொருள் தொகையினை முன் பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.