இலங்கையின் வளிமண்டல மாசு நிலைமை தொடர்பாக அண்மைக்காலமாக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் உடல் ஆரோக்கியத்துக்கு கேடான மட்டத்தில் வளிமண்டல மாசு உள்ளது.
வளியின் மாசு வளித்தர சுட்டெண் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
100-150 வரையில் வளி தர சுட்டெண் நிலவுகின்ற இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடுவது சிறார்கள், முதியவர்கள், சுவாச மற்றும் இருதய கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்தாகும்.
இந்த சுட்டெண் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்திலேயே ஆகக்குறைந்த வளி மாசு நிலவுகிறது.