1) போக்குவரத்து பிரச்சினைகளால் தற்காலிகமாக ஆசிரியர்களை அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்ற ஆலோசிக்கப்படுகிறது.
2) கல்வி அமைச்சினால், மாகாண கல்வித் திணைக்களம் உட்பட்ட கல்வித் துறை திணைக்களங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3) சம்மந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களது இணக்கம் மற்றும் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
4) தேசிய, மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாடு இன்றி, இதனை அமுல் படுத்தவும் முடியும்.
5) இந்த நடைமுறை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.