நைஜீரியாவின் வட மத்திய பிராந்தியத்தில் உள்ள நசராவா மற்றும் பெனு மாநிலங்களுக்கு இடையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆடு மேய்க்கும் இடையர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
குண்டுத்தாக்குதலை நடத்தியமைக்கு இன்னும் எந்த தரப்பும் உரிமைகோரவில்லை.
அந்த நாட்டில் அவசர பாதுகாப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.