போலியான அதிர்ஸ்ட இலாப சீட்டு தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
குருணாகலையில் 200க்கும் மேற்பட்ட போலியான அதிர்ஸ்ட இலாப சீட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர் அசல் அதிர்ஸ்ட இலாபச்சீட்டைப் போலவே போலியாக அச்சிட்டு அவற்றை விற்பனை செய்து வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.