ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணி கொழும்பு பொரளை கம்பல் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் பல அமைச்சர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதுடன், ஏனையோர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளவருக்கு ஆதரவளிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.