இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கம் நாளை (24) பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.