நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

1 week ago
Sri Lanka
aivarree.com

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர 2023/2024 ஆண்டுக்கான பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

மேலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை மே 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.