வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

1 month ago
Sri Lanka
aivarree.com

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், வீதி விபத்துகள் தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும், சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்களே இந்த விபத்துகளுக்கு முகம் கொடுப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கணக்கெடுப்பு தரவுகளின்படி, பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் கை மற்றும் விரல்களில் ஏற்படுவதுடன், சுமார் 46வீதமான, விபத்துக்கள் கண்கள் மற்றும் முகம் மற்றும் தலையில் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.