மீண்டும் யாழ்ப்பாணம் வருவேன் – நடிகர் சித்தார்த்

6 months ago
Gossip
aivarree.com

சந்தோஸ் நாராயணனோடு மீண்டு யாழ்ப்பாணம் வருவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

  • “யாழ் கானம்” இசை நிகழ்ச்சியை முடித்து மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
  • இந்த நிகழ்வு மறக்கவே முடியாத ஒரு அனுபவம், நான் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதல்முறை, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இந்த யாழ் கானத்தை நான் பார்க்கின்றேன்.
  • உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பாடகர்கள் கலந்து கொண்டு பாடி இருக்கின்றார்கள். எதிர்காலத்திலும் யாழ்ப்பாண மக்களுக்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கின்றேன்.
  • மீண்டும் அடுத்த முறை சந்திக்கும் வரை தமிழ் சினிமாவை, தமிழ் பாடல்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் அதுவே எமக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும்.
  • ஒரு பாடகராக இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு வழங்கிய சந்தோஷ் நாராயணனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • இசைக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கு சென்று கேட்டாலும் நேற்று நடந்த பிரம்மாண்டத்தை பற்றி பேசுவார்கள் இந்த பிரமாண்டத்தை சந்தோஷ் நாராயணன் பண்ணி இருக்கின்றார் அவருக்கு என்னுடைய பெரிய நன்றிகள்.
  • அடுத்த தடவை அவர் வரும்போது நானும் அவர் கூட வருவேன் என்கின்ற உறுதியை செலுத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.