டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய டீசல் விலை குறைந்தாலும், வருடாந்த விலை சூத்திரத்துக்கு அமையவே பஸ் கட்டணத்தை திருத்தம் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் ஜூலை மாதத்தில் கட்டணம் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டது.
எரிபொருளை காட்டிலும் பஸ் உதிரிப்பாகங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு அவற்றுக்கு விசேட வரிகளும் விதிக்கப்படுகின்றன. ஆகவே உதிரிப்பாகங்களின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் அதனை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.
ஆகவே தற்போதைய விலை குறைப்பின் நிவாரணத்தை பொது பயணிகளுக்கு வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.