நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கி செயலிழப்பு

6 months ago
aivarree.com

நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு மின் பிறப்பாக்கி நேற்றிரவு (17) முதல் தொழிற்பாட்டை நிறுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறினால் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்வதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட அவசர கோளாறு காரணமாக, மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் தற்போது செயலிழந்துள்ளன.

மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.