யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.
38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 10 கிலோ, 878 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.