400 பொருட்களின் விலைகள் குறைப்பு

5 months ago
aivarree.com

லங்கா சதொச, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இது தெரிவிக்கப்பட்டது. 

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது. 

நாட்டில் சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்கு பாரிய நெல் ஆலைகள் பதுக்கி வைத்திருப்பதே காரணம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.