தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த வார இறுதி நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது பூரண தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதுதொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாக்கப்படவில்லை.