சரத் பொன்சேகாவை நீக்க சஜித்துக்கு இடைக்கால தடை

3 months ago
Sri Lanka
aivarree.com

சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து விலக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகத்துக்கு எதிராக, சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவொன்றின் அடிப்படையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு எதிர்வரும் மார்ச் 4ம் திகதி வரையில் செல்லுபடியாகும்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியில் வகிக்கும் பதவி நிலைகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்தநிலையிலேயே அவர் இதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தார்.