கசகஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து; 28 பேர் பலி

7 months ago
World
aivarree.com

கசகஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தது 28 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோஸ்டென்கோ சுரங்கத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் போது சுரங்கத்தில் 252 தொழிலாளர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் 206 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

23 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.