சஷிந்திர ராஜபக்சவுக்கு நீர்வழங்கல் துறை இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதவியை வகித்த சனத் நிஷாந்த விபத்தில் காலமானதை அடுத்து, இந்த பதவி சஷிந்திரவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் நீர்ப்பாசனத்துறை இராஜாங்க அமைச்சராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.