கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து தமது பங்குகளை நீக்க எக்ஸ்போ லங்கா தீர்மானம்

4 weeks ago
aivarree.com

புகழ்பெற்ற எக்ஸ்போ லங்கா நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து தமது பங்குகளை நீக்கிக்கொள்ளும் தீர்மானத்தை அதன் அதிவிசேட பொதுக் கூட்டத்தில் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை எக்ஸ்போ லங்கா நிறுவனம், இலங்கையின் பிணையங்கள் மற்றும் பங்கு பரிவர்தனை சபைக்கு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த பங்குகளை அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூரின் SG Holdings Global Pte Ltd நிறுவனம் ஒரு பங்கு 185/- படி மீள் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த இரண்டு வருடங்களாக எக்ஸ்போ பெரும் சாதகத் தன்மையை ஏற்படுத்தி வந்திருந்தது.

உலகளவில் பொதிமாற்று சேவையை மேற்கொண்டு வருகின்ற இந்த நிறுவனம் சிங்கப்பூரில் தமது தாய் நிறுவனத்தைக் கொண்டுள்ளது.

கடந்த கொவிட் காலத்தில் பெரியளவில் வருமானத்தை ஈட்டியிருந்த எக்ஸ்போ லங்கா, குறுங்காலத்திலேயே பங்குச் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.