விகிதாசார முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் | சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

விகிதாசார முறைமையில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு சிறுபான்மைக் கட்சிகள்  வலியுறுத்தியுள்ளன.


எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நேற்று கூடியது.


இதன்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்றிருந்தன.


இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்ட தகவல்கள்:-


தேர்தல் முறைமையை மாற்றி, 8000 பிரதிநிதிகளை, 4000 குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.


இதன்காரணமாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் சாத்தியம் உள்ளது.


எனவே, விகிதார முறைமையில் தேர்தலை நடத்தவேண்டும் என்ற சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாட்டை, தமது அறிக்கையில் உள்ளீர்க்குமாறு, எல்லை மீள் நிர்ணய குழுவின் தலைவரிடம் கோரப்பட்டுள்ளது.