இந்திய ரூபாவில் இருதரப்பு வணிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கையின் வங்கி ஒன்றுடன் இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வொஸ்ட்ரோ கணக்கை திறந்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய ஸ்டேட் வங்கியின், தெற்காசிய பிராந்திய தலைமை அதிகாரி விகாஸ் கோயலுடன் நேற்றுக் கலந்துரையாடியுள்ளார்.