யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.
இன்று (23) அனலைதீவு சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை – மூளாய், அளவெட்டி – கும்பலை உள்ளிட்ட இடங்களில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார்.