மே 9 வன்முறைகள் | ஷவேந்திரசில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த பரிந்துரை

1 year ago
Sri Lanka
aivarree.com

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திரசில்வா தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், முன்னாள் கடற்படை பிரதானி வசந்த கரணாகொட தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று முன்வைக்கப்பட்டநிலையில், அதில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய சம்பவங்களை (மே 9,10) தடுப்பதற்கு தவறிய இராணுவத் தளபதியாக இருந்த ஷவேந்திரசில்வா மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.