சீனாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அடுத்த மாதம் முதல் இலங்கை வரவுள்ளனர்.
சீனாவில் ஆரம்பமான கொவிட் பரவலை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, மார்ச் மாதம் 3ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.
அதன்படி முதற்தொகுதி சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய விமானம் மார்ச் 3ம் திகதி இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு சீனாவிலிருந்து 280,000க்கும் அதிகமான சீனவர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.