தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சீ. வி. விக்னேஸ்வரன் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்த் தேசியப் பரப்பிலியங்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு அணியாக இயங்கச் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதுதொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று ஜனவரி 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள சூழ்நிலையில் சீ. வி. விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வதாக கூறப்படும் நிலையில், அய்வரி செய்திகள் அவரைத் தொடர்பு கொண்டு வினவியது.
இதன்போது கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், சென்னையில் 6ஆம் மற்றும் ஏழாம் திகதிகளில் நடைபெறவுள்ள உலகவாழ் இந்திய வம்சாவளி தமிழர் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக செல்வதாக கூறினார்.
அதேநேரம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு தொடர்பாக தமக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.