இலங்கையில் எரிபொருள் விலை அடுத்த வாரம் மாற்றமடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகச் சந்தையில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த எண்ணெய் விலை வீழ்ச்சியை அடிப்படையாக கொண்டு, விலைசூத்திரத்துக்கு அமைவாக இந்த விலைமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக தீர்மானிக்கும் கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அய்வரிக்குத் தெரிவித்தார்.
எரிபொருள் விலையை 50-100 ரூபாவுக்கு இடையில் குறைக்க முடியும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன்படி ஜனவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னர் புதிய விலை மாற்றம் அமுலுக்கு வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.