மீண்டும் சம்பூர் வரும் மின் நிலையம்

1 year ago
Sri Lanka
aivarree.com

திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • இதற்கு முன்னர் சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்திலேயே 135 மெகாவாற்று சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை 02 படிமுறைகளாக ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் நிறுவனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
  • இக்கருத்திட்டத்தின் 01 ஆம் கட்டத்தின் கீழ் 42.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 50 மெகாவாற்று சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 23.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டு செலவில் சம்பூரிலிருந்து கப்பல்துறை வரைக்குமான 40 கிலோமீற்றர் தூரம் 220 கிலோவாற்று மின்மாற்று வழியை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

  • இக்கட்டத்தை 2024 தொடக்கம் 2025 வரையான இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    கருத்திட்டத்தின் 02 ஆம் கட்டம் 72 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீட்டின் கீழ் மேலதிக 85 மெகாவாற்று இயலளவுடன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அத்துடன், குறித்த 02 ஆம் கட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 42 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கப்பல்துறையிலிருந்து புதிய ஹபரண வரைக்குமான 220 கிலோவாற்று இயலளவுடன் கூடிய 76 கிலேமீற்றர் தூரம் மின்மாற்று வழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

  • அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.