ஸ்ரீ ரங்கா தொடர்ந்தும் மறியலில்

1 year ago
Sri Lanka
aivarree.com

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

இந் நிலையில் குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கைது செய்யப்பட்டிருந்தார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.