பெட்ரோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் வெள்ளிக்கிழமை (21) அத்தாட்சிப்படுத்தினார்.
இந்த சட்டம் கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி இன்று (21) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
புதிய சட்டத்தின் அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்திற்காக பல்வேறு நிறுவனங்களை அனுமதிக்க முடியும்.
தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் எனபன மட்டுமே பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.