புதிய வகை வீசா | அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம்

1 year ago
Sri Lanka
aivarree.com

கொழும்பு துறைமுக நகரின் பணிகள் நிறைவடைகின்ற நிலையில், அதற்கு புதிய முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.


இந்த நிலையில் கொழும்பு துறைமுக நகருக்கு விசேடமான வீசாக்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


இதற்காக அந்த பிரதேசத்துக்கு மாத்திரம் 3 வகையான வீசாக்களை வழங்குவதற்கான யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.


அங்கு முதலீடுகளை மேற்கொள்கின்றவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய வர்த்தக பங்காளிகளுக்கும் இந்த வீசாக்கள் வழங்கப்படவுள்ளன.