கொழும்பு துறைமுக நகரின் பணிகள் நிறைவடைகின்ற நிலையில், அதற்கு புதிய முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கொழும்பு துறைமுக நகருக்கு விசேடமான வீசாக்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்காக அந்த பிரதேசத்துக்கு மாத்திரம் 3 வகையான வீசாக்களை வழங்குவதற்கான யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.
அங்கு முதலீடுகளை மேற்கொள்கின்றவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய வர்த்தக பங்காளிகளுக்கும் இந்த வீசாக்கள் வழங்கப்படவுள்ளன.