இம்ரான் கானை பதவி நீக்கியிராவிட்டால், அவர் பாகிஸ்தானை இலங்கையாக மாற்றியிருப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி தலைவர் அஹ்சன் இக்பால் கூறியுள்ளார்.
திங்களன்று தலகாங்கில் நடைபெற்ற PML-N தொழிலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், வெளிநாட்டிலிருந்து இம்ரான் கானுக்கு நிதியுதவி செய்தவர்கள் சுயநலத்திற்காக மட்டுமே செய்ததாக குற்றம் சாட்டினார்.
கராச்சி எங்கள் வணிக மையமாகும்.
ஆனால், அங்கு பாதுகாப்பற்ற நிலைமை ஒன்றை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஏற்படுத்தினார் என அவர் கூறியுள்ளார்.