அடுத்த ஆண்டு (2024) முதல் ஆறாம் வகுப்பு தொடக்கம் 13ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்விமுறைமையை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதி இன்னும் 2 வாரங்களில் பெற்றுக் கொள்ளப்படும் என்றும், கல்வி பாடத்திட்டத்தை ஆர்டிபிசல் இன்டலிஜன்ட் என்ற செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் மாற்றியமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிலேயே தாங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.