2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், விடைத்தாள் திருத்தப் பணிகள் இம்மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.
எனினும் திருத்தல் பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் திட்டமிட்டபடி 22ம் திகதி திருத்தப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை இருப்பதாகவும், அதனால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.