துருக்கியில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு நில அதிர்வுகளால் 30,000 பேர் வரையில் மரணித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்னுமொரு நில அதிர்வு அங்கு ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லை மையப்படுத்தி விரைவில் இந்த பாரிய நில அதிர்வு ஏற்படவிருப்பதாக அங்குள்ள புவிசரிதவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகளின் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த எதிர்வுகூரல் அறிவிக்கப்பட்டுள்ளது.