பாணந்துறையில் இசை நிகழ்ச்சியின் போது இளைஞன் கொலை

2 weeks ago
Sri Lanka
aivarree.com

பாணந்துறையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை பதிவாகியுள்ளது.

இசை நிகழ்ச்சியில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே, இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.