படுக்கை அறையில் தீ | தாயும் இரண்டு பிள்ளைகளும் பரிதாபமாக பலி

1 year ago
Sri Lanka
aivarree.com

அனுராதபுரத்தில் வீடொன்றில் பரவிய தீயினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகினர்.

அனுராதபுரம் – எலயாவத்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அவர்கள் உறங்கிய அறையில் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 30 வயதான தாயும், 5 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகியோரே பலியாகினர்.

37 வயதான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.