அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI யின் முன்னாள் நிறைவேற்றுத்தர அதிகாரியான சார்ள்ஸ் மெக்கொனிகல் இலங்கைக்கு வர்த்தகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடுதிரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 2018ம் ஆண்டு FBI யில் இருந்து விலகியுள்ளார்.
அதற்கு முன்னர் அவர் FBI யின் விசேட தர புலனாய்வாளராக செயற்பட்டு வந்துள்ளார்.
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் கோடீஸ்வரர் ஒருவருடன் தொடர்பை பேணியமைக்காக அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.