நானுஓய விபத்து – பேருந்திலிருந்த மாணவர்கள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்

1 year ago
Sri Lanka
aivarree.com

கொழும்பிலிருந்து மாணவர்களை சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்ற பேருந்து நானுஓய – ரதெல்ல குறுக்குவீதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை மோதி விபத்தை ஏற்படுபத்தியது.

இதனால் 3 சிறார்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த பேருந்தினை ஓட்டிச் சென்ற 62 வயதான சாரதி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பயணித்த மாணவர்களில் ஒருவர் டெய்லி நியுஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போது, பேருந்தின் வேகத்தை குறைக்குமாறு பல தடவைகள் சாரதியிடம் கோரிய போதும், அவர் அதனைச் சட்டைசெய்யவில்லை என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே வேகமாக சென்ற பேருந்து ரதெல்ல குறுக்கு வீதியில் பள்ளம் காரணமாக இன்னும் வேகமெடுத்ததாகவும், பல்வேறு வளைவுகளையும் பொருட்படுத்தாமல் சாரதி கடும் வேகமாக சென்ற போது மாணவர்கள் கூச்சலிட்ட போதும், அவர் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.