IMF விதித்துள்ள அடுத்த கட்டளை – இலங்கையும் சம்மதம் தெரிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை பிரயத்தனம் கொண்டுள்ள நிலையில், அதனால் அமுலாக்கப்படுகின்ற கொள்கைகளால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

இதனால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வருமானம் குறைந்த மக்களுக்கான பாதுகாப்பு வலை ஒன்றை அமுலாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளது.

எனினும் இந்தவிடயத்தில் ஏற்கனவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வருமானம் குறைந்த மக்களது விபரத்திரட்டை தயாரிப்பதற்கான விண்ணப்பங்களை மாவட்ட செயலகங்கள் திரட்ட ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபரங்களின் அடிப்படையில் அவர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு விரைவாகச் சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.